Friday, June 29, 2012

ஆண் பெண் நட்பு



ஆண் பெண் நட்பு 


இந்த காலத்தில் எனக்கு இத்தனை ஆண் நண்பர்கள் என பெண்கள் சொல்வதும் எனக்கு இத்தனை பெண் தோழிகள் என ஆண்கள் சொல்வதும்பொதுவானது .


ஆணும் பெண்ணும் காமம் இல்லாத வெறும் நட்புடன் எந்த எல்லையும் இல்லாமல் பழக முடியுமா?


சில தூய எண்ணம் உள்ள உதவும் எண்ணம் படைத்த ஆண் பெண் நட்பு இருக்கத்தான் செய்கிறது....அவர்களை நான் குறை சொல்லவில்லை


எல்லாம் ஒரு அளவுக்குள் இருந்தால் அது நல்லது.....அளவுக்கு மீறினால் ?





ஆண்களும் ,பெண்களும் கூட படிக்கும் சக நண்பர்கள் என்ற முறையில் பேசலாம் பழகலாம் ...ஆனால் அவர்கள் அவர்களின் எல்லையை தாண்ட கூடாது....... ஒன்றாக தங்குவது வெளியே செல்வது, பைக்கில் ஊர் சுற்றுவது,சினிமா செல்வது போன்றவை அந்த எல்லையில் அடக்கம்.....

அதற்காக நான் எல்லா ஆண்களையும் குறை சொல்ல வில்லை....கடலில் குண்டூசியை தேடுவதுபோல கடினமானது நல்ல எண்ணத்தோடு எந்த எல்லையும் வைத்து கொள்ளாமல் பழகும் ஆண் பெண் நட்பு....அதே கடலில் மீன் பிடிப்பது போன்ற எளிதானது தீய எண்ணங்களோடு பழகும் ஆண் பெண் நட்பு.....


கடலில் மீன்களை வலை போட்டு எளிதாக பிடிக்கலாம்....குண்டூசியை எடுக்க முடியுமா

ஆண் பெண் நட்பை இந்த சமூகம் அங்கீகரிக்க பழக்கப்படவில்லை .நட்பு வேண்டாம் என்று சொல்லவில்லை .அளவுடன் இருந்தால் நல்லது.

Tuesday, June 19, 2012

லவ் பண்ண போறிங்களா ?



லவ் பண்ண போறிங்களா ?


உங்களுக்கு ஒருவரது நடத்தை,குணம் மிகவும் பிடிக்கிறதா ? அவர் உங்களிடம் காதலை சொல்லுவார் என எதிர்பார்கிரிங்களா? அப்படிஎன்றால் நீங்கள் காதலிக்க தயராகிவிட்டிர்கள் ....

அவசரப்படாதிர்கள் ....இதோ கொஞ்சம் காரமான டிப்ஸ்...

அவர் உங்கள் நண்பராக ,தெரிந்தவராக இருக்கலாம் ..காதலராக மாறியதும் அவர்களது குணம் மாறும்.எனவே நண்பராக ,தெரிந்தவராக இருக்கும் போதான குணங்களை கண்டு நல்லவர் என அவசரப்பட்டு மனதை பறிகொடுத்து விடாதிர்கள் .


                                                               

அவரைத்தான் காதலிப்பேன் என்று விடாப்பிடியாக இருக்கிரிரிகளா ?
அதற்கு முன்பாக அவரது குடும்ப விடயங்கள்,காதல் திருமணத்தை பற்றி குடும்ப அபிப்ராயங்களை மறைமுகமாக தெரிந்து கொள்ளுங்கள் .

அவரை சந்திக்க செல்லும் போது மேக்கப் ,கவர்ச்சியான உடை என்பவற்றை தவிருங்கள் .இயல்பாகவே இருங்கள் (சீன் போடாமல் )

உங்கள் காதலர் உலகமே போற்றும் நல்லவராக இருக்கட்டும் .எக்காரணம் கொண்டும் ,எந்த சூழ்நிலையிலும் அவர் தனியே அழைக்கும் எந்த இடங்களுக்கும் தனியே போகாதிர்கள் . (அது தான் வெட்டியா நண்பிகள் இருக்காங்களே அழைச்சிகிட்டு போங்க ,சிலவேளை அவர்ட யோக்கியத்தனம் விளங்கும் )...
                                       
                                                                
தனிமையும் ,இளமையும் எப்பேர்பட்ட நல்லவரையும் கெட்டவராக்கலாம்.

ஜாக்கிரதை .......

என்ன காரம் போதாதா ?